Wednesday, October 25, 2006

கத கேளு ! தல தீவாளி கத கேளு !!

அதென்னமோ வெள்ள வெளேர்ன்னு இருக்கற பளிங்கு சாமிய எல்லாம் பாத்தா வேடிக்க பாக்கத்தான் தோணுது. கருங்கல் செல சாமிய பாத்தாத்தான் கும்பிடனும்போல இருக்கு. இதுக்கொசரமே 20மைல் தள்ளி இருக்கற கோயிலுக்கு தல தீவாளி அன்னிக்கு கெளம்பினோம். நம்ம ஊர்லனா காலைல மொத வேலயா கோயிலுக்கு போயிடுவோம். இங்க எல்லா நேரமும் கோயில தெறந்து வெக்கறது இல்லங்கறதனால, அவங்க வெப்சைட்ல இருக்கற ஃபலையர் பாத்து சாயந்திரமா 4மணிக்கு போலாம்னு முடிவாச்சு !

எப்பவுமே கோவிலுக்கு போற வழியில கார்டு போட்டு பணம் எடுக்கறது வழக்கம். எதோ அர்ச்சனைக்கு($12), சாமி தட்ல போட, கடசிக்கு கேண்டீன்ல பூரி சாப்பிடவாச்சும் வேணும்னு. தீவாளி அன்னிக்கு மட்டும் இந்த கூட்டத்துல என்ன அர்ச்சன செய்ய போறம்னு பணம் எடுக்கல. அன்னதானம் இருக்கு, அதனால கேண்டீன் செலவு இல்ல. அதோட தட்ல போட ஒரு $4 கைல இருக்கு. போதும்னு விட்டாச்சு.

ஆனா கோயில் வாசல்லயே ஒரு கருப்பு குச்சான் நிறுத்திட்டாரு. பத்து டாலர் குடுன்றான். நம்ம ஊட்டுக்காரர் என்னனா அங்க இருக்கற ஹிந்திகார(ர்)கிட்ட, கேட்கறார். ஹிந்தில கேட்டா மாத்திரம் என்ன வித்தியாசம்? அதே பதில்தான். காசில்லன்னா யாரும் பரவால்லன்னு சொல்லுவாங்கன்னு பாத்தா அதுதான் இல்ல. சரி எங்க கிட்ட காசில்லன்னு வண்டிய திருப்பிட்டோம். 5மைல் ரிவர்சல வந்து கார்டு போடலாம்னு நிறுத்தினப்புறம்தான் தெரியுது. டெபிட் கார்டு தவறி வீட்ல இருக்குன்னு. சரி, இனி என்ன பண்ண?? வெள்ள சாமியத்தான் பாப்பம்னு அங்க கெளம்பி போனா, ஏழு மணிக்குத்தான் இங்க பூஜயாம், இப்போதான் வெளக்குக்கு எண்ண பத்தாம வாங்கியார ஆள் போயிருக்கு. இருக்கற எண்ணய ஊத்தி அலங்காரம் பண்ண கொஞ்ச நேரம் ஒதவி செஞ்சுட்டு இனி அடுத்த ஒருமண்நேரத்திக்கு என்ன பண்றதுன்னு தெரியாம வீடு கெளம்பி வந்தோம். ஆக மொத்தம் ரெண்டு கோயிலுக்கு போயும் ஒரு தீபாரதன கூட பாக்கல.
அதனால நா என்ன சொல்ல வரன்னா....

1. மொத கோயிலுக்கு வெப்சைட்ல இருக்கற ஃபலையர் எல்லாம் பாத்தும் ஒரு ப்ரெயோசனமும் இல்ல. .ஃபலையர்ல பத்து டாலர் சமாச்சாரம் போடல. (ஒரே கோவங்கோவமா வந்துச்சு, யார கோவிச்சுக்க??)
2. ரெண்டாவது போன கோயிலுக்கு ஃபலையர் பாக்காம போனங்காட்டி பூஜ பாக்க முடியல.
ஒன்னு மட்டும் வெளங்குது....
...காசுகுடுன்னு சாமிய வேண்டிக்கனும்னா கூட சமயத்துல, பைல பத்து டாலர் இருந்தாதான் முடியும்.
...இல்ல இப்படி சொல்லலாம்... இந்த ஊர்ல அன்னதானம் (பிரசாதம்) சாப்பிட கூட பத்து டாலர் தேவப்படுது.
பின்குறிப்பு: என்னோட ஒரே ஆறுதல் தீவாளிக்கு போட்ட அல்வா நல்லா வந்ததுதான். ஆனாலும் கோயில் கேட்ல கொடுத்த அல்வாதான் எல்லாத்தயும் தூக்கி சாப்டுடிச்சி !

Wednesday, October 18, 2006

What goes up, has to come down !!!

In our first year of college, Our English professor once after class, came up with a discussion of how the fashion trends change. We all had fun discussing how the cycle keeps coming back again and again. One such note was about the length of the blouse sleeves. They go full hand for a while, and grows shorter and then go sleeveless, and continues again. Everyone of us had witnessed these from Black & White cinemas to Gautami's modelling with full hand blouse for Garden Saress to the recent Jo's wedding blouse. We all had a burst of laughter when my prof added, " Thank god it stopped there (sleeveless). Meaning, they stopped sleeveless and didnt go further to stop wearing blouses and completing the cycle as our greatgrandmas.
After looking at the picture on the left (and few other bollywood movies), I have to believe we didnt stop there, but in turn completed the cycle successfully. What do you say??

Wednesday, October 11, 2006

மாறாதது மாற்றம் மட்டுமே !!!

சமீபத்தில் பார்த்த சன் டி.வி நிகழ்ச்சிகள் என்னை இந்த மாதிரி யோசிக்க வைத்தது. சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் இருந்த மன்னர் ஆட்சிக்கும் இன்றைய நாட்டு நிலவரத்துக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா???

1. மன்னர் அரசவைக்கு வருகிறார். ம் ! ஆரம்பமாகட்டும், என்றதும் பட்டாடை உடுத்திய அழகு நங்கையர் சிலர் வந்து நாட்டியம் ஆடினார்கள். அன்றெல்லாம் எவ்வளவு பேர் ஆடினார்கள் என்று தெரியவில்லை. இன்று திகட்ட திகட்ட எல்லா ரகத்திலும் வந்து ஆடுகிறார்கள்.

2. அன்றும், இன்றும் ஒரே குடும்பத்தை சார்ந்தவர்களே ஆட்சியை தொடருவதை அரசு விரும்புகிறது !

3. வெகு சில மன்னர்களே ஒரே மனைவியோடு வாழ்ந்தார்கள். மற்றவர்கள் அனைவரும் அந்தபுரத்தை நிரப்பியிருந்தார்கள். இருந்தாலும் official-யாக ஒரு அரசியாரே அரசவைக்கும் மற்ற பொது நிகழ்ச்சிகளுக்கும் வருவார். இன்றும் அதே போல் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகள் உண்டு. ஆனாலும் மனைவியார், துணைவியார் என்று பல பெயர்களோடு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம்.

எல்லா மனைவியின் பேரன் பேத்திகளும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம். ஆனால் மறக்காமல் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனி தனி சுழலும் கேமிராக்கள் வைத்து அனைவருக்கும் ஒரே screen time குடுக்க வேண்டும்.

4. மன்னர் இறந்தவுடன் அன்றைய கலைஞர்களை கொண்டு சிலை வைத்தார்கள். இலக்கியம் சமைத்தார்கள்.

இன்று இருக்கும் மன்னர்களோ, மேலே சொன்னது போல், அநேக சுகங்களுடன் நல்லாட்சி செய்து மக்களுக்காக(!) நல்வழி அறிவுறைகள் ஆயிரம் தந்து சென்றமைக்காக, அவர்களுடைய வாழ்க்கை வரலாறை சினிமா எடுக்கிறார்கள். அதற்கு அரசே மானியத் தொகையும் தந்து, அந்த படத்தில் அவருடைய இரண்டாவது மனைவியாக யார் நடிப்பது என்ற சர்ச்சைக்கு, அவர்களது தொண்டர்களை வைத்து மறைமுகமாக நான்கு அறிக்கையும் விடுகிறார்கள்.

5. மூன்றாவது மனைவியான கைகேயி, தன் மகனே நாடாள வேண்டும் என்று பல சூழ்ச்சிகள் செய்து பரதனுக்கு சந்தர்ப்பம் அமைத்துக்கொடுக்க, அவனோ அண்ணனின் பாதணியை வைத்து அரசாள்கிறான். பின்னர் climax-ல் எல்லோரும் திருந்தி விடுகிறார்கள்.

இப்போது கலிகாலம். அதனால் ஆணுக்கு பெண் சமம். வேறு ஒன்றும் வித்தியாசமில்லை.

அப்பா பிரதமர்க்கு ஏகப்பட்ட girlfriends. அந்த இடையராத பணியிலும் மகளை பிரதமராக்க தவறவில்லை. அப்பாக்கு தப்பாத இளவரசியும், கணவருடன் ஒரு குழந்தை, boyfriend-உடன் இரண்டாவது குழந்தை என்று பெற்றெடுக்கிறார். ஆனாலும் ஒன்று மட்டும் மாறவில்லை. பழைய ராஜா காலத்து கதையை போலவே, முதல் தாரத்தின் (இங்கே boyfriend என்று படிக்கவும்) மகனே நாடாள்கிறான். Source

6. ராஜபாட்டை போன்று இன்றும் சாலைகள் மண்ணில்தான் இருக்கின்றன. ஆனால் கொஞ்சம் குழிகள்தான் அதிகமாக இருக்கிறது. ராஜபாட்டையில் வீதியெங்கும் வெளிச்சமாக உயரத்தில் தீப்பந்தங்கள் வைத்து அதற்க்கு தினமும் எண்ணையும் விட்டு பிரகாசித்தார்கள்.

இன்று, முதல் முறை விளக்கு வைப்பதோடு சரி. பின்னர் அது ஊத்திக்கொண்டால் அடுத்து அரசர் வீதிஉலா போகும் செய்தி வந்தால் மட்டுமே சரி செய்யபடும். அதற்கு சில(5) வருடங்கள் கூட ஆகலாம்.

7. பரிசுக்காக அரசரை வாழிய ! வாழிய! என்று புகழ்ந்து பாடினார்கள். வரிவிலக்குக்காக புகழ்கிறார்கள். இரண்டுக்கும் காரணம் அதே பணம்தான்.

8. போரில் தோற்ற அரசர் வீரமரணம் அடைய விரும்புவார். இல்லைனா சிறை உறுதி. Election-ல தோத்தாலும் சிறை உறுதி !

9. மன்னர்களுக்கு கலைதாகம் அதிகம். சிலை வடித்தார்கள். கோவில் கட்டினார்கள். கலைஞர்களை ஊக்குவித்தார்கள்.

அரசியல்வாதிகளுக்கு கலைதாகம் அதிகம்(& viceversa too). பிரச்சாரத்துக்கு கலைஞர்கள் தேவை என்று அவர்களை ஊக்குவிக்கிறார்கள் !

Monday, October 09, 2006

India tops the list for bribery !!

News in first page in msnbc. Click here for details.

அதுக்கும் ஒரு (வெக்கங்கெட்ட) தெறம வேணும்ல....ஏதோ ஒன்னுல பர்ஸ்ட் வரமில்ல??

Thursday, October 05, 2006

Story of a man who lay in bed dead for 5years !!!

His pension was auto deposited and his rent auto debited and he laid dead in bed for 5 years!

Click here for news

Monday, October 02, 2006

Action !!....Double ...

புதுசா வந்திருக்கும் படத்தில விஜய்காந்த் ரெட்டை வேடம். ஒரு விஜய்காந்துக்கே பொறும வேணும், என்னதான் நினைச்சிட்டுருக்காங்க மனசில?? ஏதோ ரெண்டு அஜீத்னாலும் பார்க்கலாம்.
அரசியல்ல இருக்கறவங்க எல்லாம் சினிமால நடிக்ககூடாதுன்னு சொன்னா எவ்வளவு நல்லா இருக்கும்......நாட்ல பாதி பிரச்சனை குறையும் !!

Here's an idea to keep customers inside shops !!

Smart idea !!(& a little cheap too) .........would work only in countries where beggers are annoying..

But I wonder whats on the other side of this picture to see, when customers enter the store?? ..may be a different store ad to get the customers in !